Monday, October 29, 2007

தேவர் ஜெயந்திக்கு வந்த காங் தலைவர் கிருஷ்ணச்சாமிக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடக்கும் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க வந்த காங் தலைவர் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்க ராமாநாதபுரத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் முதுகுளத்தூரில் கட்சி சார்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர்கிருஷ்ணச்சாமி தனது ஆதரவாளர்களுடன் சென்றார். விழா முடிந்து காரில் திரும்பிக்கொண்டிருந்த போது கன்னிகாசேரி அருகே 10 க்கும் மேற்பட்ட மர்மக்கும்பல் காரை வழிமறித்து தாக்கினர். கார் நொறுக்கப்பட்டது. இதனையடுத்து கிருஷ்ணச்சாமிக்கு கத்திக்குத்து விழுந்தது. மேலும் இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. அவருடன் வந்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் வந்ததும் வன்முறைக்கும்பல் தப்பி ஓடியது. இதனையடுத்து அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலை நடத்திய கும்பல் யார் என அடையாளம் தெரியவில்லை.மதுரை அப்பலோ ஆஸ்பத்திரியில் கிருஷ்ணச்சாமிக்கு சிகிச்சை

ராமநாதபுரம்: ராமாநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காரில் சென்ற காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணச்சாமியை வன்முறைக்கும்பல் வழி மறித்து தாக்கியது. இதில் அவருக்கு இரண்டு இடங்களில் வேல்கம்பால் குத்து விழுந்தது. இதனால் அவசரமாக அவர் பரமக்குடி ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அப்‌பலோ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

http://dinamalar.com/2007oct29/final.asp#3

No comments: